கையை வெட்டுவேன் - டி.ஆர்.பாலு எம்பி சர்ச்சை பேச்சு

கையை வெட்டுவேன் - டி.ஆர்.பாலு எம்பி சர்ச்சை பேச்சு

திமுக நிர்வாகிகள், குறிப்பாக மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். பொதுமக்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் முகம் சுளிக்க வைத்துள்ளது. இது முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இது குறித்து ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே தம் வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரையில் நடந்த திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு பங்கேற்று பேசினார். அப்போது அவர் “தனது கட்சி தலைவரை சீண்டினாலோ... ஐயா வீரமணி மீது கை வைத்தாலோ கையை வெட்டுவேன்” என பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை.   சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே இது போன்ற கட்டுக் கதைகளை சொல்லி வருகின்றார்கள் . இந்தத் திட்டத்தினை தடுத்து நிறுத்தியவர்கள் எல்லோரும் பாவிகள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,    “யாராவது உங்களை சீண்டினால் உங்களால் திருப்பி அடிக்க முடியாது . ஆனால் என்னால் முடியும்.  ஏனென்றால் உங்களுக்கு பலம் கிடையாது. எனக்கு பலம் உண்டு. அதனால் நான் திருப்பி அடிப்பேன்.   இதுதான் என் தர்மம் .  அவன் கையை வெட்டுவது தான் என் நியாயம்.  இது நியாயம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். அதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் . ஆனால் அதற்கு முன்பே அவன் கையை வெட்டி விடுவேன்.  

நீங்கள் எல்லாம் முறைப்பது பார்த்தால் நாளைக்கே போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போல் உள்ளது. அவரை நாவடுக்கத்துடன் பேச சொல்லுங்கள் என சொல்வீர்கள். சொன்னால் சொல்லிக் கொள்ளுங்கள்" என அலட்சியமாக பேசியுள்ளார்.

திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com