கொசுக்களுக்கு டாட்டா..! இனி கொசுவை விரட்ட சோப்பு பவுடர் போதும்..!

An Full Stop to the mosquito plague during the rainy season
Mosquito infestation
ஆர்.சி.ராஜா

வணக்கம்! கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காக எழுதி வருகிறேன். ஆன்மிகம், அறிவியல், தொழில்நுட்பம், உணவு, சுற்றுச்சூழல் என பல தளங்களில் எழுதுகிறேன். உடல், உளநல ஆரோக்கியத்திற்காக ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யோகாசனம் பற்றிய தகவல்களை எளிய தமிழில் பகிர்கிறேன். சிறந்த மருத்துவர்களின் பேட்டிகள், ஆராய்ச்சி அடிப்படையிலான தகவல்கள், புதிய கண்டுபிடிப்புகளை வழங்கி, மக்களின் நலனை மேம்படுத்துகிறேன். உங்களோடு இணைந்து இந்த பயணத்தைத் தொடர ஆவலாக இருக்கிறேன்!

Updated on

மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசு நோய்கள் அதிகமாகப் பரவுகின்றன. இதற்கு ஒரு நல்ல தீர்வு தேவை. 

அதனால், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) டெல்லி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய துணி சோப்புப் பவுடரைக் கண்டுபிடித்துள்ளனர். 

இது கொசுக்களை விரட்டும் சக்தி கொண்டது. கொசுக்களைத் தடுப்பதில் இது ஒரு பெரிய மாற்றம் தரும் என்று நம்பலாம்.

இப்போது இருக்கும் கொசு விரட்டிகளில் சில குறைகள் உள்ளன. கொசு விரட்டிச் சுருள்கள், லோஷன்கள், திரவங்கள் ஆகியவை சில நேரம் மட்டுமே வேலை செய்யும். 

குறிப்பாக தோல் மீது போடும் கிரீம்கள் விரைவில் அதன் சக்தியை இழந்துவிடும். பிறகு கொசுக்கடி அபாயம் அதிகமாகிவிடும். 

ஆனால், IIT டெல்லி உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட் சோப்புப் பவுடர் அப்படியல்ல. துணிகளைத் துவைக்கும்போதே, துணிகளே கொசுக்களை விரட்டும் பாதுகாப்பு கவசமாக மாறிவிடுகின்றன. இதுதான் இந்தச் சோப்பின் சிறப்பு.

இந்த புதிய சோப்புப் பவுடர், சாதாரண துணிகளைத் துவைக்கும் சோப்பு போலவே இருக்கும். இது பவுடர் மற்றும் திரவம் என இரண்டு வடிவங்களிலும் கிடைக்கும்.

IIT டெல்லி, ஜவுளி மற்றும் இழைப் பொறியியல் துறையின் பேராசிரியர் டாக்டர். ஜாவேத் நபீபக்ஷா ஷேக் இதுபற்றிக் கூறினார்: 

"ஆபத்தான கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே இதை உருவாக்கினோம். 

இதை ஒரு பெரிய வர்த்தக ஆய்வகத்தில் சோதனை செய்தோம். கொசுக்களை விரட்டுவதில் இது நிச்சயம் வேலை செய்கிறது."

கொசுக்கள் துணிகளுக்குள் இருக்கும் துளை வழியாகக் கூட கடித்துவிடும். அதனால், அவை துணி மீது அமர்வதைத் தடுக்க வேண்டும். 

இந்தச் ஸ்மார்ட் சோப்புப் பவுடரில் துவைக்கும்போது, துணிகள் கொசுக்களுக்குப் பிடிக்காத வாடையைத் தரும்.

பேராசிரியர் ஷேக் மேலும் கூறியதாவது: நாம் துணிகளை இந்தச் சோப்புப் பவுடரைப் பயன்படுத்தி துவைக்கும்போது, இதில் உள்ள பிரத்யேக வேதிப்பொருட்கள் துணியின் இழைகளில் ஒட்டிக்கொள்ளும். 

இந்த வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. மேலும், கொசுக்களின் முகரும், சுவை பார்க்கும் உணர்வுகள் இதனால் குழப்பமடைகின்றன. 

எனவே, அவை துணியின் மீது உட்காரவே யோசிக்கும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது நீடித்து உழைக்கும். 

நீங்கள் துணிகளை எத்தனை முறை துவைத்தாலும், அதன் கொசு விரட்டும் சக்தி அப்படியே இருக்கும். ஒவ்வொரு முறை துவைக்கும்போதும் இந்தச் சக்தி புதிப்பித்துக் கொள்ளும்.

இந்தச் சோப்பு வேலை செய்கிறதா என்று சோதிக்க ஒரு முறை பயன்படுத்தப்பட்டது. இதற்கு "கை-கூண்டில்-வைக்கும்" முறை என்று பெயர். 

தன்னார்வலர்கள் இந்த சோப்புப் பவுடரில் துவைத்த துணியைக் கையில் சுற்றிக்கொண்டு, கொசுக்கள் நிறைந்த பெட்டிக்குள் கையை வைத்தனர். 

இதையும் படியுங்கள்:
ஒரு நாளைக்கு 30,000 கொசுக்கள் அழிப்பு – சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவுப் புரட்சி..!!
An Full Stop to the mosquito plague during the rainy season

சோதனையில், இந்தத் துணிகள் மீது கொசுக்கள் வந்து உட்காருவது மிகவும் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டது.

இந்த புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை (Patent) கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விரைவில் இந்த சோப்பு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது, கொசு நோய்களைக் கட்டுப்படுத்த இந்தியா எடுக்கும் முயற்சிக்கு ஒரு சிறந்த நடைமுறைத் தீர்வாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com