

2006-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (ஜனவரி 1-ம்தேதி) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆவணங்களின் படி, மத்திய அரசு வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாயும் எந்த வழிகளில் கிடைக்கிறது என்பதையும், அந்த ரூபாய் எவ்வாறு பல்வேறு துறைகளில் செலவிடப்படுகிறது என்பதையும் சதவீத அடிப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு ரூபாயில் மத்திய அரசின் வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சதவீதத்தை நாம் பைசாவாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்குமத்திய அரசுத் துறை திட்டங்களுக்கு 17% நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 17 பைசாவாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் செலுத்தும் வரி மற்றும் அரசின் கடன்கள் எந்தெந்த துறைகளுக்கு எந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
ஒன்றிய பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு செலவுக்கான விவரங்களை பார்க்கலாம்.
வரவு:
வரி அல்லாத வருவாய் 10%,
நிறுவன வரி 18%,
வருமான வரி 21%,
சுங்க வரி 4%,
கலால் வரி 6%,
கார்ப்பரேட் வரி 18%,
கடன் மற்றும் பொறுப்புகள் 24%,
கடன் அல்லாத மூலதன வரவுகள் 2%,
மத்திய கலால் வரி 4%,
ஜிஎஸ்டி, பிற வரிகள் 15% ஆகும்.
செலவு:
மாநிலங்களின் வரி பங்கு 22%,
நிதி ஆணையம், பிற மானியங்கள் 7%,
நிதியுதவித் திட்டம் 8%,
முக்கிய மானியங்கள் மானியங்கள் 6%,
வட்டி செலுத்துதல் 20%,
பென்ஷன் 2%,
மற்ற செலவினங்கள் 7%,
மத்திய அரசின் திட்டங்கள் 17%,
பாதுகாப்பு 11% ஆகும்.