அடுத்த அதிரடிக்கு தயாரான INDIA POST : 5 ஆண்டுகளில் ₹25,000 கோடி இலக்கு..!

India Post
India Post
Published on

இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம், கடைக்கோடி மனிதனின் முகவரியைத் தொடும் ஒரே அமைப்பு எதுவென்றால், அது இந்தியா போஸ்ட் தான்.

சாதாரண மக்களுக்குத் தபால்கள் தடை இல்லாமலும், விரைவாகவும், எப்போதுமே புன்னகை மாறாத இனிமையான சேவையுடனும் கிடைக்கணும் என்பதுதான் நம்முடைய நீங்காத ஆசை.

இந்த உணர்வுகளையும், தேவைகளையும் முழுமையாகப் புரிந்துகொண்ட இந்தியா போஸ்ட், பல சவால்களுக்கு மத்தியிலும், களத்தில் இறங்கி வெற்றிகரமாகத் தன்னை மாற்றியமைக்கத் தொடங்கியிருக்கு.

இப்போது ஒரு பெரிய அறிவிப்பு: இந்தியா போஸ்ட், இனி நவீனத் தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு பிரமாண்டமான லாஜிஸ்டிக்ஸ் (Logistics) நிறுவனமாக மாறப் போகிறது!

இந்தத் திட்டத்தின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹25,000 கோடி பார்சல் வர்த்தக வருவாயைக் குறிவைப்பதாக அறிவித்திருக்கு.

அட, இது ஒரு சாதாரணத் திட்டம் இல்ல, ஒரு பிரமாண்டமான பாய்ச்சல்!

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் அதிரடி இலக்குகள்

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அவர்கள், டெல்லியில் நடந்த தபால் துறையின் காலாண்டு வர்த்தகக் கூட்டத்தில் (Q2 FY26) வைத்து இந்த மாற்றத்திற்கான திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவிச்சிருக்கார்:

  1. பார்சல் டார்கெட்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், பார்சல் (Parcel) வர்த்தகத்திலிருந்து மட்டும் ₹25,000 கோடி வருவாய் ஈட்டணும்.

  2. தனியார் கைகோர்ப்பு: எதிர்காலத்துல, மொத்த வருவாயில் 80% வரை தனியார் துறையின் பங்களிப்பு இருக்கணும்.

  3. சாதாரணக் கடிதங்கள், சேமிப்பு திட்டங்கள் மூலமா வர்ற வருமானம் 20% ஆக இருக்கும்.

  4. ஆனா, Amazon, Flipkart போன்ற பெரிய கம்பெனிகளுக்கு பார்சல் டெலிவரி செஞ்சு வர்ற வருமானம் 80% ஆக அதிகரிக்கணும்னு இலக்கு வச்சிருக்காங்க. இது அரசாங்கத்துக்கு இழப்பு இல்லை; வியாபாரம் பன்மடங்கு அதிகமாகிறதுனு அர்த்தம்.

  5. முக்கிய வருமானம்: மொத்த வருமானத்துல 75% லாஜிஸ்டிக்ஸ் (பார்சல் மற்றும் சரக்குப் போக்குவரத்து) மூலமாகவே வரணும்னு உத்தரவு போட்டிருக்கார்.

இந்தியா போஸ்ட் இனி வெறும் கடிதங்களை மட்டும் அனுப்பும் அமைப்பாக இல்லாமல், டெக்னாலஜி மூலம் இயங்கும் ஒரு பெரிய வர்த்தக நிறுவனமாக மாறப் போவது உறுதி.

வேகமான மாற்றத்துக்கான முக்கிய நடவடிக்கைகள்

இந்த இலக்குகளை அடைவதற்காக, இந்தியா போஸ்ட் சில பல அதிரடி நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கு:

  • புதிய தலைமுறைத் தபால் நிலையங்கள்: நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் மொத்தம் 18 தபால் நிலையங்கள் 'அடுத்த தலைமுறை அஞ்சல் நிலையங்களாக' (Next-Generation Post Offices) மாற்றப்பட இருக்கு.

  • இது சேவைத் தரத்தை வேற லெவலுக்குக் கொண்டு போகும்.

  • அட்வான்ஸ் டெலிவரி: அடுத்த ஆண்டு தொடக்கத்துல, பார்சல் மற்றும் அஞ்சல் சேவையை மேம்படுத்தப் புதிதாக 6 டெலிவரி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

  • சாலை வசதி மேம்பாடு: முக்கிய வழித்தடங்களில் உள்ள சாலைப் போக்குவரத்து வசதிகள் (Trunk Routes) மார்ச் 2026-க்குள் முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும்.

  • அதுலயும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் இணைப்புக்குச் சிறப்புக் கவனம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • செயல்திறன் குறைவான 12 வட்டாரங்களுக்குப் புதிய ஃபார்முலா: இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், தபால் சேவை எதிர்பார்த்த அளவு இல்லாத 12 வட்டாரங்களுக்கு (Circles) சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

  • இந்த வட்டாரங்கள், டெல்லி மற்றும் தெலங்கானா வட்டாரங்களின் வெற்றிகரமான செயல் மாதிரிகளைப் பின்பற்றி, தங்களது சேவையை மேம்படுத்தும்.

  • இந்த 12 வட்டாரங்களின் பட்டியல் இதுதான்: ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மற்றும் உத்தரப் பிரதேசம்.

இந்த மாற்றங்கள் பற்றிப் பேசிய அமைச்சர் சிந்தியா, இது ஒரு பிரமாண்டமான மாற்றம் என்றும், வட்டாரங்களின் தலைமைத் தலைவர்கள் (CMPGs) இனி இந்தப் பெரிய மாற்றத்தை வழிநடத்தும் 'CEO-க்கள்' ஆக உருவெடுத்து வருகின்றனர் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
அடேங்கப்பா! மாசம் ₹10,000 சேமிச்சா... 5 வருஷத்துல ₹7 லட்சம்! அசத்தல் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!
India Post

இந்தியா போஸ்ட் இனி ஒரு குடும்பமாக இணைந்து, இந்த ₹25,000 கோடி கனவை நோக்கி உறுதியாகப் பயணிக்கிறது. இந்த மாற்றம் நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் துறையையே புரட்டிப்போடும் என்பதில் சந்தேகமில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com