மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

 அகவிலைப்படி
அகவிலைப்படி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

த்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி யை 4 சதவிகிதம்  உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் கரீப் கல்யாண் அன்ன யோஜனதா திட்டத்தின்கீழ் நாட்டில்  கொரோனா காலகட்டத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அந்த நடைமுறை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப் படும்.

 -இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com