அதானி குழும விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும்! எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அதானி குழும விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும்! எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அதானி குழும விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் பிறகு அதானியின் நிறுவனங்கள் பெரும் சரிவினை சந்தித்தது. பங்குகள் கடும் சரிவினை சந்தித்தன. அதானி உலக பணக்காரர் பட்டியலில் வெகுவாக பின்னுக்கு தள்ளபட்டார். ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் கடந்த சில நாட்களாக அதானி குழுமம் வரலாறு காணத அளவிற்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இரு நாட்களாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற இருஅவைகளும் முடங்கின.

அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் இன்று நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஒன்றுக்கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில், காங்கிரஸ், திமுக, கேரள காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டன. திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

இதனை தொடர்ந்து டெல்லி நாடாளுமனற் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, அதானிக் குழும விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com