ரூ.60 லட்சம் சம்பளத்தில் கூகுளில் வேலை வேண்டுமா!

 ரூ.60 லட்சம் சம்பளத்தில் கூகுளில் வேலை வேண்டுமா!

கூகுள் CEO சுந்தர் பிச்சை தமிழ் நாட்டை சேர்ந்தவர். இவரின் ஆண்டு வருமானம் சுமார் $242 Million. பொறியியல் படித்த அனைவருக்கும் இவர்தான் ரோல் மாடல். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சுந்தர் பிச்சை போலவே கூகுள் நிறுவனத்தில் வேலையில் அமரவேண்டும் என்பது பேராசை. அந்த ஆசை ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது ரவூரி பூஜிதாவுக்கு வாய்த்திருக்கிறது. அதுவும் வருடத்துக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில்.  

கூகுள், மைக்ரோசாப்ட் , பேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணியாற்றவேண்டும் என்பது அநேகரின் விருப்பமாக இருக்கும்.

உலக அளவில் முதலிடத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் யார் தான் விட நினைப்பார்கள். சம்பளத்தோடு அந்த நிறுவனத்தில் பணி என்பது பெரிய கௌரவமாக நினைக்கப்படுகிறது. அப்படி அனைவரையும் தேடி வராத ஒரு வேலை 22 வயதே ஆன இந்திய மாணவிக்கு வீடு தேடி வந்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் வசித்து வரும் ரவூரி பூஜிதா என்ற மாணவி கூகுள் நிறுவனத்தில் பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ரவூரி பூஜிதாவின் தந்தை ஆந்திராவில் ஒரு தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றுகிறார். தான் படிக்கும் போது சொல்லித் தர, சந்தேகங்களை தீர்க்க யாரும் இல்லாததால் சுயமாகவே படித்து வளர்ந்துள்ளார். சந்தேகங்கள் வரும் ஒவ்வொரு விஷயங்களையும் தேடித் தேடி படித்துள்ளார். பொறியியல் படிப்பதற்காக ஜே.இ.இ. தேர்வு எழுதியுள்ளார். அதில் ஜார்க்கண்டில் உள்ள பிட்ஸ் மையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என பெற்றோர் கேட்டு கொண்டதால், குண்டூரில் உள்ள கே.எல். பல்கலை கழகத்தில் பி.டெக் சேர்ந்துள்ளார்.

இவர் கல்லூரில் முதலாம் ஆண்டு படிக்கும் போது கொரோனா வந்துவிட்டது. இதனால் நேரடி வகுப்புகள் பாதிக்கப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். அதில் எழும் சந்தேகங்களை மூத்த மாணவர்கள் அல்லது ஆசியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். அப்படியும் புரியவில்லை என்றால் இணையத்தில் தேடி படித்துள்ளார்.

கோடிங் வகுப்புகளில் புரியாத விசயங்களை, யூ-டியூப் வீடியோக்களை பார்த்து தெரிந்துகொண்டுள்ளார். இதற்காக பல்வேறு தளங்களுக்கு சென்று கோடிங் பயிற்சியை மேற்கொண்டு, மாதிரி தேர்வுகளிலும் பங்கேற்றுள்ளார். இப்படி கோடிங்கில் சிறந்த ஆளாக மாறியவருக்கு கூகுள் , அடோப் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணியாற்ற இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கூகுள் நிறுவன வேலையை பூஜிதா தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் ஊதியம் கொடுக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆந்திர மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. நாமும் வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com