ஓவியங்களை விற்று லட்ச ரூபாய் நன்கொடை: 5-ம் வகுப்பு மாணவி அசத்தல்!

ஸ்ருதி
ஸ்ருதி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பெங்களூருவில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருதி, தான் வரைந்த ஓவியங்களை விற்றுக் கிடைத்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை  புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்காக அளித்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜே பி நகர் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறார் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி.இவர் தனது ஐந்து வயதிலிருந்தே நூற்றுக்கணக்கான ஓவியங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் பள்ளிகள் திறக்காமல் இருந்தபோது, தனது நேரத்தை முழுவதுமாக ஓவியம் வரைய அர்பணித்துள்ளார். அப்போது அவர் வரைந்த அனைத்து ஓவியங்களையும் தன்னார்வத் தொண்டு அமைப்பின் உதவியுடன் பெங்களூருவில் பல கண்காட்சியில் அவரது பெற்றோர்கள் இடம்பெற செய்தனர்.

அதில் கிடைத்த 30 ஆயிரம் பணத்தை முதலில் அனாதை ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

அதில் கிடைத்த உந்துதலில் தன்னுடைய பல்வேறு ஓவியங்களை தொடர்ந்து பல்வேறு கண்காட்சியில் இடம்பெற செய்து அதன் மூலமாக 1.30 லட்சம் நிதி திரட்டி பெங்களூருவில் உள்ள கிட்வாய் புற்றுநோய் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

பெங்களூரு கிட்வாய் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்ட ஸ்ருதியின் பண்புக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

logo
Kalki Online
kalkionline.com