மும்பையில் அடுத்த 30 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாளிந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், இந்த தடை உத்தரவை மும்பை காவல்துறை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு நவம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று தெரிவித்த மும்பை காவல்துறை, மேலும் இதுகுறித்து தெரிவித்ததாவது:
மும்பையில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி
பயங்கரவாத செயல்களில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக அடுத்த 30 நாட்களுக்கு பிரஹன் மும்பை போலீஸ் கமிஷனரேட் பகுதியின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய அல்லது மைக்ரோ-லைட் விமானம், பலூன்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.