துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: பலர் பலி!

தீ விபத்து
தீ விபத்து
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 உத்தரப் பிரதேச மாநிலம், படோகியில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 60-க்கும் அதிகமானோர் படு காயமடைந்துள்ளனர்.

 -இந்த விபத்து குறித்து மாவட்ட நீதிபதி கவுரங் ரதி கூறியதாவது:

 உத்தர பிரதேசத்தில் படோயி பகுதியில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு நேற்றிரவு துர்கையம்மனுக்கு ஆரத்தி தீபம் காட்டும்போது, அருகிலிருந்த பந்தல் துணியில் தீ பட்டு, பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 60-க்கு மேற்பட்டோர் படு காயமடைந்தனர். 

அவர்கள் உடனடியாக வாரணாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று காலையில் 10 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மேலும்  22 பேர் பனாரஸ் இந்து பல்கலை தீவிர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 -இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய தீயணைப்புத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய நான்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கப் பட்டுள்ளதாக வாரணாசி மண்டல ஏடிஜிபி ராம்குமார் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com