இந்திய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள மற்றும் பதிவு செய்யாத நிறுவனங்கள் அனைத்தும் இனி வெளிநாடு பங்குச் சந்தைகளில் எளிதில் பதிவு செய்யலாம் என்ற புதிய நடைமுறையை இந்திய அரசு கொண்டுவந்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் 2015 ஆம் ஆண்டு சர்வதேச நிதி சேவை மையத்தை இந்திய அரசு அமைத்தது. இதன் மூலம் இந்தியாவில் செயல்பட்டு வரும் உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் எளிதில் தொடர்பு அமைத்துக் கொள்வதற்கும், மேலும் வர்த்தக தொடர்பை மேம்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருப்பது, குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையம் மூலமாக இந்தியாவில் உள்ள பங்குச் சந்தையில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அனைத்து நிறுவனங்களும் வெளிநாட்டு பங்குச் சந்தையில் பதிவு செய்யலாம் என்று அனுமதி வழங்கி உள்ளார்.
2020 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்வதேச நிதி சேவை மைய ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் வெளிநாட்டின் உடைய முதலீடுகளை எளிதாக பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இதன் மூலம் கடன் பத்திரம் பட்டியலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து செயல்பாடுகளும் சர்வதேச விதி சேவை மையத்தால் கண்காணிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பங்குகளில் எளிதாக பதிவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடு மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.