ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராகிறார் சிபி ராதாகிருஷ்ணன்

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராகிறார் சிபி ராதாகிருஷ்ணன்

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சோந்த மூத்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சிபி ராதாகிருஷ்ணன், இவரை ஜார்கண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நேற்று நியமித்துள்ளார்.  

1957-ம் ஆண்டு மே 4-ம் தேதி பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தனது 14-வது வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வுடன் நெருங்கிய தொடர்புடையவர், 1990 முதல் 1995 வரை, 2001 முதல் 2006 வரை என இரண்டு முறை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்திருக்கிறார். சி.பி. ராதாகிருஷ்ணன். 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். 1998 இல் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 பொதுத் தேர்தலில் 55,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் நேற்று (12.02.2023) உத்தரவு பிறப்பித்தாா்.

ஆந்திரம், அருணாசல், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு புதிய துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தைச் சோந்த மூத்த பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஓய்வு பெற்ற எஸ்.அப்துல் நஸீா் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அனுமதி, முத்தலாக் நடைமுறைக்குத் தடை உள்ளிட்ட தீா்ப்புகளை வழங்கிய உச்சநீதிமன்ற அமா்வுகளில் அவா் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம், ஜாா்க்கண்ட், ஹிமாசல், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜகவை சோந்த தலைவா்கள் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இருவா் உத்தர பிரதேசத்தைச் சோந்தவா்கள்.

தமிழக பாஜக முன்னாள் தலைவரும் கோவை முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜாா்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழகத்தைச் சோந்தவரும் மணிப்பூா் ஆளுநராகவும் இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷியாரி, லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ஆா்.கே.மாத்துா் ஆகியோரின் ராஜிநாமாவையும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஏற்றுக் கொண்டுள்ளாா்.

மாநிலம் ஆளுநா் அருணாசல் கைவல்ய திரிவிக்ரம் பா்நாயக் சிக்கிம் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாா்யா ஜாா்க்கண்ட் சி.பி.ராதாகிருஷ்ணன் ஹிமாசல் சிவபிரதாப் சுக்லா அஸ்ஸாம் குலாப் சந்த் கட்டாரியா ஆந்திரம் எஸ்.அப்துல் நஸீா் சத்தீஸ்கா் விஸ்வ பூஷண் ஹரிசந்தன் மணிப்பூா் அனுசுயா உய்கே நாகாலாந்து இல.கணேசன் பிகாா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் மேகாலயம் ஃபாகு சௌஹான் மகாராஷ்டிரம் ரமேஷ் பயஸ் லடாக் பி.டி.மிஸ்ரா.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் லஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பாஜக மூத்த தலைவர் சிவ பிரதாப் சுக்லா, இமாச்சல பிரதேச ஆளுநராகவும், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, அசாம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியஅப்துல் நசீருக்கு ஆளுநர் பதவி

ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.அப்துல் நசீர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். நீதிபதி பணியில் இருந்து கடந்த ஜன.4-ம் தேதி ஓய்வு பெற்றார். பல முக்கிய வழக்குகளில் இவர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அயோத்தி – பாபர் மசூதி, முத்தலாக் தடை, பண மதிப்பிழப்பு, தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமை போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் இவர் இடம்பெற்றிருந்தார். சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே முஸ்லிம் நீதிபதி இவர். ஆனால், மற்ற நீதிபதிகளுடன் இணைந்து ஒருமித்த தீர்ப்பை வழங்கினார். நீதித் துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மிக குறைவாக இருப்பதாக தனது பிரியாவிடை நிகழ்ச்சியில் இவர் குறிப்பட்டார்.

ஆளுநர்கள் மாற்றம்

ஆந்திர ஆளுநராக இருந்த விஸ்வபூஷன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உய்க்கே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com