இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகரிப்பார்கள்: சுவிஸ் நிதி நிறுவனம்!

Millionaires
Millionaires
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிதி நிறுவனமான கிரெடிட் சுவிஸ் தெரிவித்துள்ளது.

 -இந்நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்திர உலக சொத்து அறிக்கையில் தெரிவித்ததாவது;

 கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.25 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2026-ல் 8.75 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவில் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 மடங்கு உயரும். 

2021-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் பேர் ரூ.8 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2026-ல் இந்த எண்ணிக்கை 105 சதவீதம் உயர்ந்து 16.23 லட்சமாக இருக்கும்.

 -இவ்வாறு அந்த அறிக்கையில்  குறிப்பிடப் பட்டுள்ளது.

 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதையடுத்து சீனா 2-ம் இடத்திலும், ஜப்பான் 3-ம் இடத்திலும், பிரிட்டன் 4-ம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com