அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி: ஓபிஎஸ் அறிக்கை!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ பன்னீர்செல்வம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் சாதாரண நடைமுறை.

அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 14 சதவீதம் உயர்த்தி வழங்கியது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

இதனை பின்பற்றி மாநில அரசு ஊழியர்களுக்கும் மேற்படி 14 சதவீதஅகவிலைப்படி உயர்வு 01-07-2021 முதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்இந்த நடைமுறையை பின்பற்றாமல் 01-07-2021க்கு பதிலாக 01-01-2022 முதல் 14 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கியது. அதாவது 6 மாத கால அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

தற்போது, 01-07-2022 முதல் மேலும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து ஒருமாதத்திற்கு மேலாகியுள்ள நிலையில் இது பற்றி ஆளும் அரசு மௌனமாக உள்ளது.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து காலம் தாழ்த்தி வழங்குவதை ஏற்க இயலாது என கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com