பக்தியுடன் சிவனை வணங்கிய பிரதமர் ! கேதார்நாத் சென்றார்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு பாரம்பரிய ஆடைகளையும் வழங்கினார். கேதர்நாத் பகுதியில் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். அங்கேயுள்ள ஆதிகுரு சங்கராச்சாரியார் சமாதிக்கும் சென்று வழிபட்டார். அங்கு கோயில் பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

கேதார்நாத்
கேதார்நாத்

முன்னதாக கோயிலுக்கு வந்த மோடி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான 'சோழா டோரா' அணிந்திருந்தார்.கேதர்நாத் கோயிலுக்கு மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உடன் வந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பக்தியுடன் சிவனை வழிப்பட்டார் பிரதமர் மோடி. பிரதமரின் வருகையையொட்டி கேதார்நாத் கோவிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com