நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் திடீர் திருப்பம்! உடற்கூராய்வு செய்த மருத்துவர் ஷா தகவல்!

sushanth singh
sushanth singh

மகேந்திர சிங் தோணியில் பயோகிராஃபி படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது .

சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை மருந்து பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மன நல மருத்துவரிடமும் சுஷாந்த் சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்தனர். சுஷாந்த்தின் மரணத்தில் ரியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவருக்கு போதை மருந்து கொடுத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் ஷேக் கைது செய்யப்பட்டு 28 நாட்கள் சிறையில் இருந்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

sushanth singh
sushanth singh

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த பொழுது கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தது. 5 உடலில் ஒன்று விஐபியின் உடல். அந்த உடலை நாங்கள் உடற்கூராய்வு செய்தபோது எங்களுக்கு அந்த உடல் சுஷாந்த்தினுடையது என்று தெரிய வந்தது என்று தெரிவித்துள்ளார் .

அவரது உடலில் நிறைய மார்க்குகள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன. இதனைப் பார்த்தபோது என் உயர் அதிகாரிக்கு இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினேன். அப்போது முடிந்த வரை சில புகைப்படங்கள் எடுத்து பின் அவரது உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அவர் எனக்கு அறிவுறுத்தினார்'' என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com