நீங்கள் என்னை தொந்தரவு செய்யலாம் ஆனால் என் மனதை சிதைக்க முடியாது: திகார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா!

நீங்கள் என்னை தொந்தரவு செய்யலாம் ஆனால் என் மனதை சிதைக்க முடியாது: திகார் சிறையில் இருந்து மணிஷ் சிசோடியா!
கார்த்திகா வாசுதேவன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ந்த வார தொடக்கத்தில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். சிபிஐயால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.

திகார் சிறையில் இருந்து முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிறைவாசம் தனக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், ஆனால் அது எனது மனதை சிதைக்க முடியாது என்று செய்தி அனுப்பியுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவரை பிப்ரவரி 26 அன்று மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) கைது செய்தது.

இந்த வார தொடக்கத்தில் அவர் அமலாக்க இயக்குநரகத்தாலும் (ED) கைது செய்யப்பட்டார்.

"சாஹேப், என்னை சிறையில் அடைப்பதன் மூலம் நீங்கள் என்னை தொந்தரவு செய்யலாம், ஆனால் உங்களால் என் மனதை உடைக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களை தொந்தரவு செய்தனர், ஆனால் அவர்களின் ஆவி உடைந்துவிடவில்லை -- சிறையிலிருந்து மணிஷ் சிசோடியாவின் செய்தி" என்று ஹிந்தியில் ஒரு ட்வீட் தற்போது வாசிக்க கிடைத்திருக்கிறது. இது ஆம் ஆத்மி தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமாகும்.

logo
Kalki Online
kalkionline.com