நேற்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. நேற்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் விளையாட்டு போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அணி கோப்பையை வென்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.5 ஓவரில் 187 ரன்களை எடுத்து கோப்பையை வென்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலியும் (63), சூர்யகுமார் யாதவும்(69) அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு பௌண்டரியை விளாச இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. ஆட்டநாயகன் விருதை சூரியகுமார் யாதவ் பெற்றுக்கொள்ள தொடர் நாயகன் விருதை அக்ஷர் படேல்( 3/33) தட்டி சென்றார்.