

2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம்(ஜனவரி) 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 22-ம்தேதி முதல் 24-ம்தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் அப்போதைய கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்நிலையில் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. அதனை தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார்.
வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் நிலையில் பட்ஜெட் குறித்த தகவல்கள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் முன்னால் உள்ள சிறிய கணினியான டேப்-ல் பார்த்து தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் :
* தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது
* 8 பிற மாநிலங்கள், அயல்நாடுகளில் தமிழ் படிப்பதற்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன
* மகளிர் சுய உதவிக் குழுக்களில் ரூ.6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* கோவில்களில் பெண் ஓதுவார் நியமனம் திமுக அரசின் மகத்தான சாதனையாகும்.
* அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பாக பிரசவம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
* மகளிருக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* தமிழ்நாட்டில் மகளிருக்காக 19 தோழிகள் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன
*6,23,529 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
* பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் திட்டத்தில் 10,637 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
* மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களாக 25 இடங்களில் அன்புச்சோலைகள் திறக்கப்பட்டுள்ளன.
*தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
* உள்ளாச்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் 3,632 பேர் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்பு
* ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,471 கோடி ஓதுக்கீடு
* இலங்கை தமிழர்களுக்காக உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது.
* பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தில் 3,721 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
* ஆசிரியர்கள் நலம் பேண முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* காலை உணவுத் திட்டம் மூலம் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 4 ஆண்டுகளில் ரூ.1,284 கோடி ஒதுக்கீடு
* சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
* 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 6.75 லட்சம் மாணவர்களுக்கு ம டிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.
* 8,52,680 மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2,000 பராமரிப்பு தொகை, ரூ,1,500 உதவித்தொகை பெறுகின்றனர்.
* கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை, அறிவியல், கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.
* பள்ளிக்கல்வித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிதி ரூ.48,534 கோடி ஒதுக்கீடு.
* 11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத் திட்டங்கள் அறிமுகம்
* புதுமைப்பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
* முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.101 கோடி அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.
* உயர்கல்வி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* ஊரக வளர்ச்சித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,638 கோடி ஒதுக்கீட செய்யப்படுகிறது.
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு- மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு
* முதல்வர் விளையாட்டு போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் திட்டத்தில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.809 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
* சென்னையில் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து சமச்சீராக குடிநீர் வியோகிக்க முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.3,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு
* நதிக்கரை மேம்பாட்டுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு.
* மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
* நான் முதல்வன் திட்டத்தில் 48,65,050 மாணவர்களுக்கு திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
* GIG தொழிலாளர்கள் 2000 பேருக்கு தலா ரூ.20,000 மானியம்.
* புதிதாக 30 முதல்வர் படைப்பகங்கள் அமைக்க ரூ.104 கோடி ஒதுக்கீடு
* அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.22,090 கோடி ஒதுக்கீடு.
* திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.
* 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார வளர்ச்சி உடன் அரசு இயங்கி வருகிறது.
* சென்னை தரமணியில் செமிகண்டக்டர் மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
* செமி கண்டக்டர் இயக்கத்துக்கு 5 ஆண்டு செயல்திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு
* தொழில்துறையில் ரூ.12.30 லட்சம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
* கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய முதன்மையான மையமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை
* 11.19% எனும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு.
* வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,500 கோடி மதிப்பில் பணிகள் நடந்த வருகின்றன.
* விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.6,374 கோடி ஒதுக்கப்பட்டு 87,34,363 கோரிக்கைகள் தீர்ப்பு
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆண்டில் 36 லட்சத்துக்கும் மேலான வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் 1,000 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டம்
* 5 ஆண்டுகளில் 38,62,919 அமைப்பு சாரா தொழிலார்களுக்கு ரூ.3,397 கோடி நலத்திட்ட உதவிகள்.
* வனவிலங்குகளை பாதுகாப்ப 6 புதிய வனவிலங்கு சரணாலயம்
* நாமக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் 9 நியோ டைடல் பூங்கா கட்டப்படுகின்றன.
* இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு, 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு.
* சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.1,618 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
* அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.
* 5 ஆண்டில் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 118 பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவையும் அரசு அமைக்கிறது.
* ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி செய்யப்படுகிறது.
* புதிய சிற்றுந்து திட்டம் மூலம் 6303 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு.
* கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6130 கோடியில் 12,087 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு.
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 10,226 பணிகள் ரூ.5300 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.
* மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1782 கோடி ஒதுக்கீடு.
* கலைஞர் கைவினை திட்டம் மூலம் ரூ.405 கோடி கடன் உதவி, ரூ.83 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4000 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலை துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு.
* போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.
* பழங்குடியின மக்களுக்கு 6655 வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு.
* பழங்குடியினர் வீடு கட்டுமான பணிகளுக்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு
* சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை
* 30.79 கோடி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
* மின்சார துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு.
* சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆண்டுகளில் சிறுபான்மை மாணவர்கள் 90,773 பேருக்கு கல் உதவித்தொகை.
* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-க்கு நிதி ரூ.28,687 கோடி ஒதுக்கீடு.
* கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீனவர் நலத்துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு.
* அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
* சுற்றுலா துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
* உலகளாவிய சுற்றுலா மாநாடு மூலம் 127 நிறுவனங்களுடன் ரூ.22,794 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து.
* அதிகம் அறிப்படாத 22 சுற்றுலாத்தலங்கள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
* கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு லு.1317 கோடி ஒதுக்கீடு
* நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்.
* 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
* ரூ.8363 கோடி மதிப்புள்ள 8,113 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாட்டில் பசுமை பரப்பை உயர்த்த அரசு தொடர்ந்து நடவடிக்கை
* விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.69,087 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படுகிறது.
* ரூ.148 கோடியில் குந்துக்கால் மீன்பிடி இறக்குதளம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன
* பழங்குடியின மக்களுக்கான தொல்குடி திட்டத்தின்கீழ் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பழமையான தேவாலயங்கள் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
* கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கீடு
* கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
* ராமநாதபுரம் மாட்டம் பாம்பனில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது.
* ரூ.471 கோடியில் 64 புராதன கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
* தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டுக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு
* தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக 30,000 வீடுகள்
* அரசு ஊழியர்களுக்கான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு ரூ.11,000 கோடி
* ரூ.758 கோடியில் பால் பண்ணைகள் நவீனமயமாக்கப்படும்.
* மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 43 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
* கடந்த 5 ஆண்டுகளில் 81 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
* 5 ஆண்டுகளில் 14,318 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* மனிதவள மேலாண்மை துறையில் 1,55,131 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு ரூ.1.55 லட்சம் ஒதுக்கீடு.
* மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 4135 முகாம்கள் நடத்தப்பட்டு 23.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
* பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க திட்டம்.
* போதைப்பொருட்களுக்கு எதிராக தூதுவர்களாக செயல்பட 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி.
* பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள் கட்டப்பட்டுள்ளன,
* கோவை, திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலியில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
* கடந்த 5 ஆண்டுகளில் 37 புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்ப்டடுள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் பேர் அரசுப்பணியில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
* தஞ்சை, சேலம், நாமக்கல்லில் மாவட்ட சிறை வளாகங்கள் அமைக்க நடவடிக்கை
* கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு.
* பொதுப்பணி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ1,694 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆண்டுகளில் பேரிடம் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்டது ரூ.50,922 கோடி- கிடைத்தது ரூ.1,151 கோடி.
* சென்னை மாநகாட்சியில் பேரிடம் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
* பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு
* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு 38.48 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
* கூட்டுறவு துறையின் மூலம் ரூ.12,359 கோடி பயிர் கடன், ரூ.4889 கோடி நகைக்கடன், ரூ.2118 கோடி சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* மாநில வளர்ச்சிக்கு கடன் பொருளாதாரம் முக்கியமானது. முன்னுரிமைத் துறைகளுக்காக ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
* காவல்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு
* விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வறட்சி தடுப்பு பணிகள்.
* மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்பு நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.
* 10.86 லட்சம் வங்கி கணக்குள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.12,078 கோடி செயலற்ற நிதிகள் கண்டறிப்பட்டன.
* பேரிடர் மேலாண்மை பணிக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.9,160 கோடி ஒதுக்கீடு
* நிதிப்பகிர்பு 4.07 சதவீதமாக குறைந்ததால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு, கர்நாடகா, கேரளாவை விட தமிழ்நாட்டுக்கு நிதிப்பகிர்வு விகிதம் குறைவு
* ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு ரூ.9,600 கோடி இழப்பு
* நடப்பாண்டில் மட்டும் ரூ.9600 கோடி வருவாள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* நிதி வருவாய் பகிர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
* தற்போதைய நிதிக்குழுவின் வரிப்பகிர்வு குறித்த பரிந்துரை ஏமாற்றம் அளிக்கிறது.
* 0.44% அளவிலேயே தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு அதிகரிப்பு
* போதிய அளவு நிதியை வழங்காமல் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்த ஓன்றிய அரசு முயற்சி.
* வரிப்பங்கு குறைப்பால் தமிழ்நாட்டுக்கு ரூ.1,202 கோடி இழப்பு
* தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாள் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 540 கோடி
* 16-வது நிதிக்குழுவின் அறிக்கை தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
* சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவில் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை.