பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா!

பலூன் திருவிழா
பலூன் திருவிழா

தமிழகத்தில் கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பொள்ளாச்சியில் கடந்த சில வருடங்களாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான பலூன் திருவிழாவை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, வருகிற ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக  தமிழக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள இந்த பலூன் திருவிழாவில் அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகள் பங்குகொள்கின்றன.

இந்நாடுகள் சார்பாக மெகா சைஸ் ஹாட்-ஏர் பலூன்கள் சுமார் 10 பறக்கவிட திட்டமிடப் பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலூன் பைலட்கள் பொள்ளாச்சிக்கு வருகைதர உள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் இந்த பலூன் திருவிழாவில் காலையிலும் மாலையிலும் இந்த பலூன்கள் பறக்க விடப்படும். அவற்றில் பொதுமக்கள் ஏறிச் சென்று ரவுண்டு போய் வரலாம். இத்திருவிழாவில் சுமார் 50 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

-இவ்வாறு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com