

தமிழக காவல்துறை தலைவராக மகேஷ்குமார் அகர்வால் சற்றுமுன் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாடு மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வாய்ப்பு தந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தும் பேட்டி அளித்தார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை சைபர் கிரைம் காவல்துறைக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டில் போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும் எனவும் சைபர் கிரைம்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் உறுதி கூறியுள்ளார்.