ஆவின் பால் தட்டுப்பாடா ? அன்புமணி கேள்வியும் அமைச்சர் பதிலும்...!

Anbumani
Anbumani

ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது உண்மை தான் ஆனால் தட்டுப்பாடு இல்லை என அன்புமணி ராமதாஸ் கருத்திற்கு அமைச்சர் நாசர் பதிலளித்துள்ளார்.

நேற்று அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆவின் பால் குறித்து கருது தெரிவவித்திருந்தார். அதில்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான்.

ஆவின் பால்
ஆவின் பால்

ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது. பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு ஆனால் மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம். வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் நாசரிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த கருத்து உண்மை இல்லை எனவும் பால் விற்பனை அதிகரித்துள்ளது தான் உண்மை, தேவைக்கு ஏற்ப பூர்த்தி செய்யும் வகையில் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

minister Nazzar
minister Nazzar

தொடர்ந்து பேசிய அவர், “ ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூ.12 விலை உயர்த்தபட்டுள்ளது. பிறமாநிலங்களில் ரூ.70க்கு விற்கப்படும் நிலையில் ஆவினில் ரூ.60க்கு தான் விற்கப்படுகிறது. மேலும் பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஆவின் பாலின் விலை ரூ.10 குறைவாகவே உள்ளது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு ரூ.46 என்ற விலையில்தான் தற்போது வரை விநியோகம் செய்யப்படுகிறது” என தெரிவித்தார்.

மேலும் வாணிப நோக்கு விற்பனைக்கு மட்டுமே ரூ. 60 என்ற விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தகூடிய நீலநிறம் மற்றும் பச்சை நிற பால் விலை எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் குறைக்கப்பட்ட விலையிலே விநியோகித்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com