ஜனவரி -18 முதல் விமான சேவை: திருச்சியிலிருந்து திருப்பதிக்கு தொடக்கம்!

ஜனவரி -18 முதல் விமான சேவை: திருச்சியிலிருந்து திருப்பதிக்கு தொடக்கம்!
Published on

திருச்சியிலிருந்து திருப்பதிக்கு விமான சேவையை இம்மாதம் 18-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக: இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு விமான சேவை வழங்கப்பட வேண்டுமென விமான பயணிகள் மற்றும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக இண்டிகோ நிறுவனம் மதுரையில் இருந்து திருப்பதிக்கு கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் திருச்சியிலிருந்து ஜனவரி 18-ம் தேதி முதல் திருப்பதிக்கு விமான சேவையைத் இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த குறிப்பிட்ட நாட்களில் திருப்பதியிலிருந்து மாலை 5 மணிக்குப் புறப்படும் விமானம், அதேநாள் மாலை 6.20 மணிக்குத் திருச்சி வந்தடையும். இதைத் தொடா்ந்து மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, திருப்பதிக்கு இரவு 8 மணிக்கு விமானம் சென்றடையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com