டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை!

டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை!

டெல்லியில் வருகிற  ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக டெல்லி காற்று மாசுபாடு காரணமாக பெருமளவில் பாதிக்கப் பட்டு வருகிறது. அதனால் டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு வருகிறது.

அதேபோல் இந்த வருடம் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை விதித்து அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார்.

-இதுகுறித்து தனது டுவிட்டரில் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் பதிவிட்டதாவது;

டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு வருகிற ஜனவரி 1-ம் தேதி  வரை அமலில் இருக்கும். இந்த பட்டசுத் தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த வருடமும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

-இவ்வாறு டெல்லி அமைச்சர் கோபால்ராய் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com