காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

– இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று அதிகாலையில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மேலும் பல ராணுவ  வீரர்கள்  காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை நடத்திய இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.  மேலும் பதுங்கியுள்ள மற்ற தீவிரவாதிகளை கண்டறிய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

– இவ்வாறு இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com