மாநிலங்களவை எம்.பி. பதவி; காஷ்மீர் பழங்குடி நியமனம்!

மாநிலங்களவை எம்.பி. பதவி; காஷ்மீர் பழங்குடி நியமனம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் பழங்குடியினத்தவரான குர்ஜார் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குலாம் அலி என்பவரை மாநிலங்களவை நியமன எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது பெரும் வரவேற்பை் பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து,அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பெரும்பான்மையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த குர்ஜார், மக்கள் உள்ளனர். இந்நிலையில்,அப்பிரிவைச் சேர்ந்த குலாம் அலி என்பவரை மாநிலங்களவை எம்.பி-யாக பிஜேபி அரசு நியமனம் செய்துள்ளது.

-இதுகுறித்து  மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், காலியாக உள்ள மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு குலாம் அலியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் இந்த நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com