கலாமண்டலம் வேந்தர் பதவிலிருந்து கவர்னர் நீக்கம்; கேரள முதல்வர் அதிரடி!

ஆரிப் முகமது கான் நீக்கம்
ஆரிப் முகமது கான் நீக்கம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கேரளாவில் சட்ட பல்கலைக்கழகம் தவிர மற்ற 15 பல்கலைக் கழகங்களின் வேந்தராக கவர்னர் ஆரிப் முகமது கான் இருந்துவருகிறார். இந்த நிலையில் அப்பல்கலைக் கழகங்களின் விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் வகையில் தனித்தனி மசோதாக்கள் கொண்டுவர கேரள அரசு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் கேரள கலாசார துறையின் கீழ் இயங்கிவரும் கலாமண்டலம் கல்ப்பித பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் நீக்கப்பட்டுள்ளார். 2006-ம் ஆண்டில் இருந்து கவர்னர் இந்த பல்கலைகழக வேந்தராக இருந்து வருகிறார்.

கலாமண்டலம் பல்கலைக்கழக விதிகளின்படி வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதால், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் புதிய வேந்தர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, கேரளாவில் அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்தும் கவர்னரை நீக்க முதல்வர் பினராயி விஜயம் தலைமியிலான கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கவர்னரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com