ஒரே நேரம் 7 பேருக்கு தூக்கு தண்டனை: குவைத் நாட்டில் அரங்கேற்றம்!

ஒரே நேரம் 7 பேருக்கு தூக்கு தண்டனை: குவைத் நாட்டில் அரங்கேற்றம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

குவைத்தில் 7 பேருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் இது போன்ற கூட்டு மரண தண்டனை நிறைவேற்றம் மிகவும் அபூா்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான 'குனா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேருக்கு மரண  தண்டனை விதிக்கப் பட்டது. அந்த வகையில் இந்நாட்டு  மத்திய சிறைச் சாலையில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 7 பேரும் நேற்று தூக்கிலிடப்பட்டனா்.

இந்த மரண தண்டனை நிறைவேற்றப் பட்டவா்களில் 3 குவைத் நாட்டு ஆண்கள், ஒரு குவைத் நாட்டுப் பெண், ஒரு சிரியா நாட்டவா், ஒரு பாகிஸ்தானியா், ஒரு எத்தியோப்பிய பெண் ஆகியோர் அடங்குவா்.

-இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொலைக் குற்றத்துக்காக இந்த 7 பேருக்கும் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com