மதுபான ஊழல்: மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கம்!

மதுபான ஊழல்: மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோரின் ரூ.52 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கலால் கொள்கை ஊழல் தொடர்பான மோசடி வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அவரது மனைவி சீமா மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.52 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் நிதிமுறைகேடுகள் தொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் மணீஷ்சி சோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்த்தை அடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தில்லியில் மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் பெற்றதாக அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி மறுத்தது. எனினும் தில்லி கலால் கொள்கையை ரத்துச் செய்த தில்லி துணைநிலை ஆளுநர், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்.

சிபிஐ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நிதிமுறைகேடுகள் தடுப்புச் சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் நிதிமுறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், மணீஷ் சிசோடி. அவரது மனைவி மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.52.24 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மணீஷ் சிசோடியா, அவரது மனைவிக்கு சொந்தமான 2 அசையா சொத்துக்கள் மற்றும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாரியட் மீடியா நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் ஜோஷியின் வீடு, பஞ்சாப் மாநில முன்னாள் எம்.ல்.ஏ.தீப் மல்ஹோத்ராவின் மகனும் மது வியாபாரியுமான கெளதம் மல்ஹோத்ராவின் வீடு உள்ளிட்ட அசையா சொத்துக்கள், மணீஷ் சிசோடியாவின் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.11.49 லட்சம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அமன் தீப் சிங்குக்கு சொந்தமான பிரிண்டுகோ சேல்ஸ் நிறுவனத்தின் ரூ.16.45 கோடி வைப்புத் தொகை உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் என ரூ.52.24 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஊடகப் பிரிவு பொறுப்பாளர் விஜய் நய்யார், மது வியாபாரிகள் சமீர் மகேந்துரு, அமித் அரோரா, ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் அருண் பிள்ளை மற்றும் சிலருக்கு சொந்தமான ரூ.76.54 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com