மேட் இன் இந்தியா மேஜிக்: ரயில்வே ஒப்பந்தம்... அமெரிக்க நிறுவனங்கள் அதிர்ச்சி..!

Zoho's products and team vs Microsoft and Google.
India's Zoho online platform challenges US tech giants.
Published on

அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தாக்குதல்கள், இந்தியத் தயாரிப்புகளுக்கு 50% வரி விதிப்பு மற்றும் இந்திய ஊழியர்களுக்கான H1B விசா கட்டண உயர்வு போன்ற கட்டுப்பாடுகள் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்த ஒரு சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் "சுதேசி" (உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவித்தல்) அழைப்பு வலுப்பெற்றது. இந்த தேசிய அழைப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், இந்திய ரயில்வேத் துறை ஒரு புரட்சிகரமான முடிவை எடுத்துள்ளது.

Zoho Workplace vs Microsoft & Google Workspace.
Zoho Workplace: India's alternative to global tech giants.

மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் இயங்குதளங்களுக்குப் பதிலாக, இந்தியாவின் சொந்த நிறுவனமான ஜோஹோ-வின் சேவைகளைப் பயன்படுத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது இந்தியத் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதோடு, அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு வலுவான சவாலையும் விடுத்துள்ளது.

அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில், "நான் ஜோஹோவை நோக்கி நகர்கிறேன். இனி எனது ஆவணங்கள், விரிதாள் மற்றும் விளக்கக்காட்சிகளுக்கு (documents, spreadsheets and presentations) ஜோஹோவின் தளங்களையே பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்," என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் சுதேசி கொள்கையை ஏற்று, இந்தியத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு, ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில், "உங்கள் இந்த நடவடிக்கை, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வரும் எங்கள் பொறியாளர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும். நாங்கள் உங்களைப் பெருமைப்படுத்துவோம். நம் தேசத்தைப் பெருமைப்படுத்துவோம். ஜெய் ஹிந்த்!" என்று கூறியுள்ளார்.

இந்தியத் தொழில்நுட்பத்தின் புதிய அடையாளம்: ஜோஹோ

1996-ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோரால் சென்னையில் தொடங்கப்பட்ட ஜோஹோ, இன்று உலகளாவிய அளவில் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 மற்றும் கூகுள் வொர்க்ஸ்பேஸ் போன்ற வெளிநாட்டுச் செயலிகளுக்கு இணையாக, ஜோஹோ வொர்க்பிளேஸ் மற்றும் ஜோஹோ ஆபிஸ் சூட் போன்ற பல சக்திவாய்ந்த கிளவுட் அடிப்படையிலான மென்பொருள் சேவைகளை வழங்குகிறது.

வணிகம், மனிதவளம், கணக்குப்பதிவு, வாடிக்கையாளர் மேலாண்மை போன்ற 80-க்கும் மேற்பட்ட கிளவுட் சேவைகளை ஜோஹோ கொண்டுள்ளது.

முக்கியமாக, ஜோஹோ நிறுவனம் "மேட் இன் இந்தியா" கொள்கையைத் தொடக்கம் முதலே பின்பற்றி வருகிறது. கிராமப்புற இளைஞர்களுக்குத் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள் வழங்கி, அவர்களது திறமைகளை வெளிக்கொணர்கிறது.

இதற்கொரு சிறந்த உதாரணம், தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் அமைந்துள்ள அதன் அலுவலகம். இன்று, ஜோஹோவின் தயாரிப்புகள் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில், 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
'வல்லரசு நாடுகளுடன் சண்டையிட வேண்டாம்'': Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு..!
Zoho's products and team vs Microsoft and Google.

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி, இந்தியத் தொழில்நுட்பத்தின் வலிமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.

ரயில்வேயின் இந்த முடிவு, இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற தொழில்நுட்ப நாடாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது ஜோஹோவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ஐடி துறைக்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com