மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதல் பெண் சோப்தார் நியமனம்!

பெண் சோப்தார் லலிதா
பெண் சோப்தார் லலிதா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண்‘சோப்தாராக’ திலானி என்பவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தற்போது, மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முதன் முதலாக பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப் பட்டுள்ளார். இவர், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி மாலாவுக்கான சோப்தாராக  பணியில் நியமிக்கப் பட்டுள்ளார்.  மதுரையை சேர்ந்த பட்டதாரியான லலிதா, தனக்கு இந்த சோப்தார் பணி மிகவும் பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com