தேசிய விளையாட்டுப் போட்டி விவகாரம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்: அன்பில் மகேஷ் விளக்கம்!

தேசிய விளையாட்டுப் போட்டி விவகாரம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்: அன்பில் மகேஷ் விளக்கம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போனதற்கு பள்ளிக்கல்வி துறையின் அலட்சியமே காரணம் என பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடப்பாண்டு தமிழக அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் விளையாட்டுப் பிரிவில் மதிப்பெண் பெறும் வாய்ப்பை தமிழக மாணவர்கள் இழந்துள்ளனர். இத்தகைய தவறுகள் இனி நடைபெறாதவாறு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றார்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருந்தால் உலக அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்க வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தினால் தகுதி இருந்தும் வாய்ப்பை இழந்து விட்டதாக மாணவ மாணவிகள் வருத்தத்தில் உள்ளனர்

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

தேசிய அளவிலான போட்டிகள் குறித்து முறையான தகவல் வரவில்லை என்று கூறிய அவர், 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மேலும், தேசிய அளவிலான போட்டிகளுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் அனுப்பப்படாத விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போனதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர்ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com