மாண்டஸ் புயல் தாக்கம்! 100 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது !

Tree
Tree
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் 90 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே போன்று செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள்

தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் பலத்த காற்று வீசியது. சில இடங்களின் மழையம் பெய்தது.

மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கி, இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரமாக இந்த கரையைக் கடக்கும் நிகழ்வு நடந்தது.

Tree
Tree

புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின. பல பழமையான மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் இருந்த மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தன.

logo
Kalki Online
kalkionline.com