திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு சாலை வசதி வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை!

திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு சாலை வசதி வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை!

சாலை வசதியில்லாமல் இருமலைகளுக்கு இடையே மூங்கில்களில் தொட்டில் கட்டி 6 முதல் 40 கி.மீ., தூரம் வரை தூக்கிச் செல்லும் திருமூர்த்திமலை - குருமலை பகுதி மக்களுக்கு தேவையான சாலை வசதிகளை செய்து தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கோரிக்கை அளிக்கப் பட்டுள்ளது.

திருமூர்த்திமலை - குருமலை பகுதிக்கு சாலை வசதி செய்து கொடுத்து மலைவாழ் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார்.

உடுமலை தாலுகாவில் உள்ள மலை கிராமங்களில் 3,500க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக சாலை வசதிகள் கேட்டு போராடி வருகின்றனர்.முதியவர்கள், கர்ப்பிணிகள், நடமாட முடியாதவர்கள், பாம்பு கடித்தவர், உடல்நிலை பாதித்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது.

அந்த பகுதிகளில் சாலை வசதியில்லாமல் இருமலைகளுக்கு இடையே மூங்கில்களில் தொட்டில் கட்டி 6 முதல் 40 கி.மீ., தூரம் வரை தூக்கிச் செல்கின்றனர் அப்பகுதி மக்கள். சமவெளி பகுதிக்கு வந்து ஆம்புலன்சில் செல்வதற்குள் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இந்த மலை கிராமங்களில் இருந்து வேறு வழித்தடத்தில் மருத்துவமனை செல்ல வேண்டுமானால் 110 கி.மீ., சுற்றிவர வேண்டியுள்ளது.

இது போன்ற பல்வேறு கோரிக்கையை தொடர்ந்து , ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் இதுநாள் வரை அதற்கான பணிகள் துவங்கவில்லை.அதன் முதல்கட்டமாக திருமூர்த்திமலை முதல், குருமலை வரை ரோடு அமைத்தால் 6 கி.மீ., தூரத்தில், அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட முடியும். 110 கி.மீ., சுற்றிவர வேண்டிய அவசியம் இருக்காது. பல உயிரிழப்பையும் தடுக்க முடியும்.

மலைப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் இருந்தும், ஆசிரியர்கள் வந்து போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கி, தலைச்சுமையாக கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் சிறு விவசாய பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளது.

வன உரிமை சட்டப்படி ரோடு வசதி செய்யலாம். வன உரிமை குழுவில் திருமூர்த்திமலை முதல் குருமலை வரை ரோடு அமைக்க கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ரோடு வசதியை செய்து கொடுக்க முன்வர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com