மாஷா அமினி: எழுச்சியைத் தூண்டிய பெண்மணி!

மாஷா அமினி: எழுச்சியைத் தூண்டிய பெண்மணி!
Published on

ஈரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் குறியீட்டை மீறியதாகக்கூறி கைது செய்யப்பட்டு இறந்து போன மாஷா அமினி அவர் இறந்து 6 மாதங்களுக்குப் பின் இப்போது தான் இன்னமும் அதிகமாக நினைவுகூரப்படுகிறார்.

கைது செய்யப்பட்டு சில வாரங்களில் அவர் இறந்து போனாலும், நாடு முழுவதுமாக ஒரு எழுச்சியைத் தூண்டிய விதத்தில் இனி பல ஆண்டுகளுக்கு அவர் மறக்கப்பட மாட்டார். மாஷா அமினியின் வாழ்வும், அவரது பெயரும் எழுச்சிக்கும், போராட்டத்துக்குமான தூண்டலாக அங்கு நீங்காது நிலைபெற்று விட்டது.

குர்த் இனத்தைச் சேர்ந்தவரான அந்த 22 வயதுப் பெண்ணின் பெயர் இன்று ஈரானுக்குள் அத்தனை வீடுகளுக்கும், வீடுகளில் உள்ளவர்களுக்கும் நன்கு அறிமுகமான ஒரு ஹவுஸ்ஹோல்ட் பெயராக மாறிவிட்டது. இது மாற்றத்திற்கான கோரிக்கைகளுக்கான ஒரு அணிவகுப்பு புள்ளியாகும். உலகெங்கிலும், அவர் பெண்ணுரிமைப் பிரச்சாரகர்களுக்கு ஒரு நாயக பிம்பமாகவும், இஸ்லாமிய குடியரசின் மேற்கத்திய எதிர்ப்பாளர்களுக்கு ஒரு அழியா நினைவுச் சின்னமாகவும் ஆகிப் போனார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில்,அமினி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் ஈரானின் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றிருந்தபோது, அங்கு நகர மையத்தில் உள்ள ஒரு மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியேறும்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அப்போது ஈரானின் இஸ்லாமிய மதக்கட்டுபாடுகளுக்குப் "பொருத்தமற்ற" உடையை அணிந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர், ஒழுக்கக் காவல் துறை அதிகாரிகளால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காவல்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்ட ஒரு சிறு கண்காணிப்பு வீடியோவின் படி, காவல்நிலையத்தில் அவர் ஒரு பெண் காவல்துறை அலுவலருடன் சண்டையிட்டு கீழே விழுந்தார்.

பின்னர் செப்டம்பர் 16 அன்று இறப்பதற்கு முன் கோமா நிலையில் மருத்துவமனையில் மூன்று நாட்கள் கழித்தார், காவல் நிலையத்தில் அவருக்கு நிகழ்ந்த பாதிப்புகளின் அடிப்படையில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மாஷா அமினிக்கு இப்படி நேர்ந்திருக்கலாம் என மக்கள் கருதினர்.

பொதுமக்களில் பலருக்கும், மேற்கு நகரமான சாகேஸைச் சேர்ந்த இந்த இளம் பெண், முக்காடு அணிய வேண்டிய கடமைக்கு எதிரான போராட்டத்தை வெளிப்படுத்தியதால் தான் உயிரையே இழக்க வேண்டிய நிலைக்குக் ஆளானார்

என்று மனதில் ஒரு எண்ணம் ஆழமாகப் பதிந்து போனது. அதனால் தான் இன்று அவரது பெயர பல மாதங்களாக நாட்டைப் பீடித்திருந்த ஒரு எதிர்ப்பு மனநிலைக்கான எழுச்சி இயக்கத்தின் பேரணியாக மாறியது.

எனவே தான் அவரது கல்லறையில் உள்ள கல்வெட்டில்: "நீங்கள் இறந்துவிடவில்லை மாஷா, உங்கள் பெயர் ஒரு அடையாளமாக மாறிவிட்டது" எனும் வாசகம் பொறிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஒரே இரவில், அவரது உருவப்படம் ஈரானின் உள்ளே இருக்கும் நகரங்கள் அனைத்திலும் பரவியது, அனைத்துச் சுவர்களிலும் பறக்கவிடப்பட்டது மற்றும் இஸ்லாமிய அடக்குமுறை எதிர்ப்பாளர்களால் கைகளில் ஏந்தி உயர்த்தப்பட்டது. அதுவே ஈரானுக்குள் வெளியிடப்பட்ட சில பத்திரிகைகளின் அட்டையையும் ஆக்ரமித்தது, மாதாந்திர Andisheh Pouya இன் மார்ச் பதிப்பு உட்பட அனைத்து அட்டைப்படங்களுமே மாஸா அமினியின் முகத்தையே தாங்கி நிற்கின்றன.

"அவரது மரணத்திற்கு முன் எவராலும் அறியப்படாதிருந்த, மாஷா இன்று அடக்குமுறைக்கு எதிரான அடையாளமாக மாறியுள்ளார், மேலும் அவரது அப்பாவி முகம் அந்த கூற்றை வலுப்படுத்துகிறது" என்று அரசியல் விஞ்ஞானி அஹ்மத் ஜெய்தாபாடி கூறினார்.

வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுங்கள்...

தலைநகர் மற்றும் அவரது சொந்த குர்திஸ்தான் மாகாணத்தில் தொடங்கிய அவரது காவல் மரணம் குறித்த எதிர்ப்புகள், மாற்றத்திற்கான நாடு தழுவிய இயக்கமாக விரைவாக காளான்களென வளர்ந்தன.

அவரது மரணத்தின் மீதான பொதுமக்களின் கோபம், ஈரானின் பழமைவாத ஆதிக்கம் செலுத்தும் கார்டியன் கவுன்சிலின் "பொருளாதார நெருக்கடி, ஒழுக்கக் காவல்துறை மீதான அணுகுமுறைகள் அல்லது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தல் போன்ற அரசியல் சிக்கல்கள் உட்பட தொடர்ச்சியான பிரச்சனைகளுடன்" இணைந்ததாக சமூகவியலாளர் அப்பாஸ் கூறினார்.

பாலின சமத்துவம் மற்றும் அதிக வெளிப்படைத்தன்மையைக் கோரும் இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட தெருப் போராட்டங்கள் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உச்சத்தை எட்டின.

டஜன் கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரியில், போராட்டங்கள் தணிந்து, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பொது மன்னிப்பை ஆணையிட்ட பிறகு, அதிகாரிகள் போராட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை விடுவிக்கத் தொடங்கினர்.

"கலவரங்களுடன் தொடர்புடைய" சுமார் 22,600 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதித்துறையின் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே இந்த வாரம் தெரிவித்தார்.

ஆனால் அடிப்படைக் குறைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் எதிர்ப்பாளர்கள் மீண்டும் தெருக்களுக்குத் திரும்பலாம் என்று அப்டி கூறினார். "ஆர்ப்பாட்டங்கள் முடிந்துவிட்டன, ஆனால் எதிர்ப்பு முடிவுக்கு வந்துவிட்டதா என்று நான் சந்தேகிக்கிறேன்," என்று அவர் கூறினார், "நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் உள்ளன.

"தற்போதைய சூழ்நிலையில், எந்தவொரு சம்பவமும் புதிய எதிர்ப்புகளைத் தூண்டும்."

கடந்த மூன்று மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பாதித்த மர்ம நச்சுத்தன்மையால் பொதுமக்களின் கோபம் தூண்டப்பட்டிருப்பதை இதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் மேற்கோள் காட்டினார்.

அந்த பாணியில் பார்க்கும்போது, இயக்கம் "முடிவுகளை" உருவாக்கியுள்ளது, குறிப்பாக பெண்களுக்கான ஆடைக் குறியீட்டை அமலாக்குவதில் ஒரு அமைதியான தளர்வு கிடைக்கக்கூடும் என்று அவர் வலியுறுத்தினார்.

"சட்டம் மற்றும் விதிகள் மாறாவிட்டாலும், ஹிஜாப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் பொறுத்துக்கொள்ளப்படுகிறது" என்று ஜெய்தபாடி கூறினார்.

"இஸ்லாமிய குடியரசு ஒரு கொள்கை மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளது போல் தெரிகிறது, இருப்பினும் சவாலை எதிர்கொள்வதற்கான தேவையான நீடித்த பதிலடியில் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை." என்கிறார் அவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com