
சமூக ஊடகங்கள் விரைவான இலாபங்களையும், அதிக ஆபத்துள்ள முதலீடுகளையும் கொண்டாடும் இக்காலத்தில், உண்மையான செல்வச் செழிப்பு (Wealth Creation) என்பது பொறுமை, ஒழுக்கம் மற்றும் துல்லியமான நிதித் திட்டமிடலின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதை ஒரு சமீபத்திய நிகழ்வு நிரூபித்துள்ளது.
நிதி ஆலோசகர் CA நிதின் கௌசிக் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட ஒரு வாடிக்கையாளரின் கதை, ஊக வணிகம் (Speculative Bets) இல்லாமல், நிலையான முதலீட்டின் மூலம் எப்படி ஒருவரின் நிகர சொத்து மதிப்பை (Net Worth) அபாரமாக உயர்த்த முடியும் என்பதற்கான பாடமாக அமைந்துள்ளது.
5 ஆண்டுகளில் நிகர சொத்து மதிப்பின் வளர்ச்சி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த 38 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.8 கோடியாக இருந்தபோது, சி.ஏ. நிதின் கௌசிக்கின் ஆலோசனையைப் பெறத் தொடங்கினார்.
இன்று, அவரது நிகர மதிப்பு ரூ.31 கோடியாக உயர்ந்துள்ளது. இது எந்தவிதமான அதிவேக வர்த்தகமோ (High-risk Trading) இல்லாமல், 8.7% ஆண்டுச் சராசரி வளர்ச்சி வீதத்தில் (CAGR) அடையப்பட்டுள்ளது.
கௌசிக் இதை "நிலைத்தன்மையுடன் இருக்கும்போது கூட்டு வட்டி (Compounding) அமைதியாக தனது மாயத்தை நிகழ்த்துகிறது" என்று விவரிக்கிறார்.
1. பங்குச் சந்தை முதலீடு: ஸ்திரத்தன்மைக்கான அடித்தளம்
இந்த முதலீட்டு உத்தியின் மிக முக்கிய அடித்தளம், சந்தை போக்குகளைப் பின்பற்றாமல், நீண்ட கால நம்பிக்கை (Long-term Conviction) அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு பங்குச் சந்தை போர்ட்ஃபோலியோ ஆகும்.
பிரிவுப்படுத்தல் (Diversification): வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை சமன் செய்யும் வகையில், முதலீடுகள் ஸ்மால்-கேப், மிட்-கேப், மற்றும் லார்ஜ்-கேப் பிரிவுகளில் உள்ள "செல்வத்தை உருவாக்கும் பங்குகளில்" (Wealth-creator stocks) பிரிக்கப்பட்டன.
பரஸ்பர நிதிப் பங்கு (Mutual Fund Allocation): மொத்த பங்கு முதலீட்டில் சுமார் 20% தேர்ந்தெடுக்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் (Mutual Funds) முதலீடு செய்யப்பட்டது. இது குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து, நிலையான வருமானத்தை உறுதி செய்தது.
2. உலோகங்களில் வியூக முதலீடு:
2020ஆம் ஆண்டில், மொத்த போர்ட்ஃபோலியோவில் உலோகங்களின் (Metals) பங்கு வெறும் 5% மட்டுமே இருந்தது. இருப்பினும், கௌசிக் படிப்படியாக இந்த ஒதுக்கீட்டை 20% ஆக அதிகரித்தார்.
இந்த வியூக முதலீடுட்டு நடவடிக்கை, 2025ஆம் ஆண்டில் தங்கம் சுமார் 63% மற்றும் வெள்ளி சுமார் 65% உயர்ந்த massive rally-ஐ பயன்படுத்த உதவியது. இது பங்குச் சந்தை அபாயங்களுக்கு எதிராக பாதுகாப்புக் கவசமாகவும் (Hedging) செயல்பட்டு, போர்ட்ஃபோலியோவுக்கு குறிப்பிடத்தக்க ஏற்றத்தை அளித்தது.
3. அசையாச் சொத்து (Real Estate) குறித்த விவேகமான முடிவு
வாடிக்கையாளர் ரூ.3.5 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடன் மூலம் வாங்க திட்டமிட்டபோது (8.5% வீட்டுக் கடன்), கௌசிக் அதற்கு மாற்றாக ஆலோசனை வழங்கினார்.
கடன் மூலம் வீடு வாங்குவதற்குப் பதிலாக, கடனற்ற (Debt-free) ஒரு பிரீமியம் பிளாட்டில் முதலீடு செய்ய அவர் பரிந்துரைத்தார். அதன் விளைவு:
சொத்து மதிப்பு உயர்வு: 20 மாதங்களுக்குள் நிலத்தின் மதிப்பு 25% உயர்ந்தது.
வட்டி சேமிப்பு: இந்த முடிவின் மூலம் வாடிக்கையாளர் சுமார் ₹75 லட்சம் வட்டி செலுத்துவதிலிருந்து தப்பினார்.
4. வரி மேலாண்மை மற்றும் சேமிப்பு
சம்பாதித்த பணத்தில் அதிகப் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதே உண்மையான செல்வ மேலாண்மை ஆகும். வாடிக்கையாளர் ELSS நிதிகள் மற்றும் மூலதன ஆதாய அறுவடை (Capital Gains Harvesting) போன்ற வரித் திறனுள்ள முதலீட்டுக் கட்டமைப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தியதன் மூலம், நான்கு ஆண்டுகளில் ரூ.52 லட்சத்திற்கும் அதிகமாக வரியில் சேமித்தார்.
செல்வம் உருவாக்குவதற்கான இறுதி மனநிலை
இந்த பிரம்மாண்டமான நிதி வெற்றியை அடைந்த பிறகும், வாடிக்கையாளர் அதே செடான் காரை ஓட்டுவதாகவும், ஆடம்பரமான வாழ்க்கையை நாடவில்லை என்றும் கௌசிக் குறிப்பிடுகிறார்.
ரூ.8 கோடியிலிருந்து ரூ.31 கோடிக்கு ஐந்து வருடப் பயணம் – இது அதிர்ஷ்டம் அல்லது குறுக்குவழிகளால் நிகழ்ந்ததல்ல.
இது ஒழுக்கம், பன்முகப்படுத்தல் (Diversification), மற்றும் காலத்தின் பரிசு. நிதின் கௌசிக்கின் வார்த்தைகளில்,
"உண்மையான செல்வம் ஒரே இரவில் கட்டமைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஒழுக்கமான முடிவின் மூலமும் அது அமைதியாக உருவாக்கப்படுகிறது."