காலமானார் பங்காரு அடிகளார்.. பக்தர்கள் அதிர்ச்சி!

Bangaru adigalar
Bangaru adigalar

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளாக வெளியான தகவல் அவரது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தனது 83ஆவது பிறந்தநாளை பங்காரு அடிகளார் கொண்டாடிய நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளது.

கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. தற்பொழுது அவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவலால் மேல் மருவத்தூரில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. காலமான பங்காரு அடிகளாருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அவர்களால், அம்மா என்று அழைக்கப்பட்டு வந்தார் பங்காரு அடிகளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com