நாளை டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்... காரணம் இது தான்!

நாளை டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்... காரணம் இது தான்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்திக்க அமைச்சர் துரைமுருகன் டெல்லி செல்கிறார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்கு பின் அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின. மேலும் அவர்களிடம் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நாளை டெல்லி செல்லும் அமைச்சர் துரை முருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவதை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்க்கு அனுமதி வழங்ககூடாது என வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com