அரசு நிகழ்ச்சியில் கோபத்துடன் வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Ma Subramanian
Ma Subramanian

 சென்னையில் பல இடங்களில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், அதுகுறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று சென்னை சுகாதாரத்துறை பயிற்சி அலுவலகத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் முன்னிலையில் நடக்க ஏற்பாடு செய்யப் பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்ற வந்தபோது, அந்த பயிற்சி அரங்கில் வெறும் 50 செவிலியர்கள் மட்டுமே அமர்ந்திருந்ததை கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அந்நிகழ்ச்சியை பாதியிலேயே புறக்கணித்துவிட்டு அதிகாரிகளிடம் கோபித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து அந்த அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com