‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி வீரர்களை உற்சாகப்படுத்த வாருங்கள்’ அமைச்சர் உதயநிதி அழைப்பு!

‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி வீரர்களை உற்சாகப்படுத்த வாருங்கள்’ அமைச்சர் உதயநிதி அழைப்பு!

கிராமப்புற ஏழை, எளிய விளையாட்டு வீரர்களின் திறமையை வெளியுலகம் காண களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவிலான 27,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல், 25ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளன.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்த வருகை தருமாறு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கிராமப்புற ஏழை, எளிய விளையாட்டு வீரர்களின் திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 27,000 வீரர், வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 1 முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளன. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ள வீரர், வீராங்கனையருக்கு வாழ்த்துகள். போட்டிகளை நேரில் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்த பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்களை அழைக்கின்றோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com