கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி!

சென்னை, அண்ணா சதுக்கத்துக்கு வெளியே அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1.20 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கும் இந்த நவீன வசதிகளோடுகூடிய புதிய பேருந்து நிலையத்துக்கு, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்தப் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ‘கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய தொகுதியில் இந்த நவீன பேருந்து நிலையத்தை அமைப்பது பெருமையாக உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை முதல்வர் அறிவித்து இருந்தார். கலைஞர் பணியாற்றிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்துக்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக குளிரூட்டப்பட்ட அறை, நவீன கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு போன்றவை செய்யப்பட்டு உள்ளது. இந்த சிறப்பான பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பெருமளவில் உபயோகப்படுத்தி பயன் பெறுவர் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இடத்தின் பெயர் எப்போதுமே அண்ணா சதுக்கம்தான். இங்குள்ள பேருந்து நிலையத்துக்குத்தான், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்தப் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com