Organized power theft racket supplying 60 homes in Versova.
Gang caught selling stolen electricity for a year in Mumbai

மும்பையின் 'பவர் ஸ்டார்ஸ்'! ⚡ மின்சாரம் திருடி விற்று ஒரு வருடம் லாபம் பார்த்த தில்லாலங்கடி கும்பல்..!

திருடர்களுக்குத் தூக்கமே வராது! மும்பையில் ஒரு வருஷமா மின்சாரத்தைத் திருடி,வித்து கொள்ளை லாபம் சம்பாதிச்ச தில்லான கிரிமினல்கள்!
Published on

திருடர்களுக்கு எதையாவது ஒண்ணை ஆட்டையப் போடனும் இல்லைன்னா தூக்கமே வராது....சில பேரு பணத்தை கையாடல் பண்ணுவாங்க, சில பேரு வெள்ளி, தங்க நகைகள் திருடுவாங்க... ஆனா, இந்தக் கும்பல் ரொம்பவே 'தில்'லான கிரிமினல்கள். இவங்க திருடினது பணமும் இல்லை, நகையும் இல்லை... ஒரு நகரத்தின் உயிர்நாடியே திருடப் பார்த்தாங்க! அதுதான் மின்சாரம்!

மும்பையின் வெர்சோவா பகுதியில் ஒரு கிரிமினல் கும்பல் மின்சாரத்தை விற்று ஒரு வருஷமா கொள்ளை லாபம் சம்பாதிச்ச கதை இது.

திக் திக் வெர்சோவா: 60 வீடுகளுக்குப் பூட்டு போட்ட திருடர்கள்

இது நடந்தது மும்பை, வெர்சோவாவில் உள்ள சித்தார்த் நகர் பகுதியில். ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல், அங்கே ஒரு மிகப் பெரிய திருட்டு நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இவங்க திருடினது யார்கிட்ட இருந்து? அதானி எலெக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் (AEML) நிறுவனத்தின் பிரதான மின் கம்பிகளில் இருந்து!

இந்தக் கும்பல் நிலத்தடியிலும், மேலே ஆகாயத்திலும் சட்டவிரோத கேபிள் நெட்வொர்க்கை உருவாக்கி, தங்கள் 'வியாபாரத்தை' செமையா நடத்திக்கிட்டு வந்திருக்காங்க.

சிசிடிவி கேமராப் பதிவுகளில், மின்சாரக் கேபிள்களைத் திருடும் அந்தக் கும்பல்
சிசிடிவி கேமராப் பதிவுகளில், மின்சாரக் கேபிள்களைத் திருடும் அந்தக் கும்பல்
  • அம்பலமானது எப்படி? அதானி மின் நிறுவனத்தின் விழிப்புணர்வுக் குழு (Vigilance Department) இந்தச் சட்டவிரோத இணைப்புகளைக் கண்டுபிடித்து, CCTV காட்சிகளைச் சாட்சியாகச் சேகரித்து போலீசிடம் கொடுத்தது.

  • பணம் பறித்த முறை: இந்தக் கில்லாடி கும்பல், அந்தப் பகுதியில் இருந்த 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் கொடுத்துள்ளார்கள்.

  • அதுக்கு மாசாமசம் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை கட்டணம் வசூல் பண்ணியிருக்காங்க!

ஒரு வருஷமா நடந்த மோசடி!

இந்தச் சட்டவிரோதச் சப்ளை கிட்டத்தட்ட ஒரு வருஷமா நடந்திருக்கு. ஒரு சாதாரண திருடனைப் போல அல்லாமல், இவங்க ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலாகச் செயல்பட்டுள்ளனர்.

இந்த ஒரு திருட்டினால் மட்டும், அதானி மின் நிறுவனத்துக்குச் சுமார் ரூ. 3.34 இலட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கு.

ஆறு பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சுனில் ஷிண்டே என்ற முக்கியக் குற்றவாளி, ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைக் கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோதுதான், மற்ற ஐந்து பேரும் கூட்டாளிகள் என்ற தகவல் வெளியானது.

அலுமினிய ஒயர்கள், வெட்டும் கருவிகள் மற்றும் திருட்டுச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவ் உட்படப் பல ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மீட்டரையே கழட்டிவிட்ட ஆசாமி: தொடரும் அவலம்

வெர்சோவா சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், ஆசாரி சலீம் உஸ்மான் ஷேக் என்பவர் மீதும் இன்னொரு பவர் திருட்டுப் புகார் பதிவாகியுள்ளது.

அவருடைய இடத்தில் அதானி குழு நடத்திய திடீர் ஆய்வில், அதிகாரப்பூர்வ மீட்டரையே தவிர்த்துவிட்டு (Bypass) நேரடியாக மின் கம்பியில் இருந்து இணைப்பை எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சட்டவிரோத மின் இணைப்பு, ஒரு தங்குமிடம் மற்றும் ஒரு கடை என இரண்டு வணிக நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களுக்கும் மேலாக சப்ளை செய்திருக்கு! இதனால் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 6 இலட்சத்துக்கும் அதிகம்!

இதையும் படியுங்கள்:
அதானியின் மாஸ்டர் பிளான்: புதிபோரி மின்நிலையம் மீண்டும் மின்னுகிறது..!
Organized power theft racket supplying 60 homes in Versova.

மின்சாரத் திருட்டு என்பது ஒரு தனிப்பட்ட செயல் அல்ல; அது ஒரு நகரத்தின் உள்கட்டமைப்பை ஆட்டங்க காண வைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்!

இதுபோன்ற கிரிமினல் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால்தான், நேர்மையாக மின்சாரக் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com