திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர் ரூ 1.02 கோடி நன்கொடை!

திருப்பதி கோயிலுக்கு இஸ்லாமியர் ரூ 1.02 கோடி நன்கொடை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சென்னையைச் சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகிய இஸ்லாமியர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.02 கோடி நன்கொடையாக வழங்கினர்.

 -இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவித்ததாவது;

 சென்னையைச் சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகிய இஸ்லாமியர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 1.02 கோடி நன்கொடைகான காசோலையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயலதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.

இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சமும், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட  பத்மாவதி ஓய்வறையில் ரூ. 87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கும் தரப்பட்டது.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

 இந்த இஸ்லாமிய பக்தர் ஏற்கனவே பலமுறை ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு நன்கொடைகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com