நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடைகளால் மாலை!

வடைகளால் மாலை
வடைகளால் மாலை

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்க ஒரு லட்சத்து எட்டு வடைகளைக் கொண்ட வடை மாலை தயாரிக்கும் பணி இன்று தொடங்கியது.

நாமக்கல்லில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் உலகப் பிரசித்தி பெற்றவர். இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் படும். அண்டுதோறும்  மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் கொண்டாடப் படும் இந்த அனுமன் ஜெயந்தி விழாவில், நாமக்கல் ஆஞ்சநேயருக்கு  ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட பிரமாண்ட மாலை சாத்தப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப் படும்.  

அந்த வகையில் இந்தாண்டு இம்மாதம் 23-ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம்  அதிகாலை 5  மணிக்கு சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சாத்தப்பட உள்ளது. இதற்காக  வடைகள் தயாரிக்கும் பணி கோவில் மண்டபத்தில்  இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள் வடைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். வடை தயாரிக்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com