நிலவுக்கு போகலாம்.. வாரீர்களா? 14-ம் தேதி நாசா ராக்கெட் ஏவி பரிசோதனை!

நாசா
நாசா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ஆர்டெமிஸ் என்கிற திட்டத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இம்மாதம் 14-ம் தேதியன்று ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளது.

அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969-ல் முதன்முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்தது. அதன்பின்னர் நிலவுக்கு யாரும் மனிதர்களை அனுப்பவில்லை. இந்நிலையில் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் முயற்சியாக, ஆர்டெமிஸ் -1 என்ற ராக்கெட்டை இம்மாதம் 14-ம் தேதியன்று விண்ணில் செலுத்தவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ராக்கெட் செலுத்தப் படவிருந்த திட்டமானது, ராக்கெட்டில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 3-ம் தேதியன்று சில தொழில்நுட்பக் காரணங்களால் பயணம் தடைபட்டது.

இந்நிலையில் தற்போது இன்ஜின் எரிபொருள் கசிவு உள்ளிட்ட அனைத்து கோளாறுகளும்  சரிசெய்யப்பட்ட நிலையில் நவம்பர் 14-ம் தேதியன்று ராக்கெட் விண்ணில் செலுத்தப் படவுள்ளது. அந்த வகையில் ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட்டன் நடைமுறைகள் நவம்பர் 12-ம் தேதியன்று தொடங்குவதாக நாசா அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com