தேசிய வெற்றி தினம்; போர் நினைவு சின்னத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இன்று தேசிய வெற்றி தினம் கொண்டாடுவதை முன்னிட்டு டெல்லியில்  போர் வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானை இந்தியா போரில் வீழ்த்தியது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் இன்றைய  நாள் தேசிய வெற்றி தினமாக கொண்டாடப் படுகிறது.

இந்த நிலையில், வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் போர் நினைவு சின்னத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். மேலும் பாகிஸ்தான் போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக முப்படை தலைமை தளபதிகள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

logo
Kalki Online
kalkionline.com