

கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள், மே 1ம் தேதியே கசிந்திருப்பதாகவும், அவை தலா ஐந்து லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருப்பதும் ராஜஸ்தான் போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் மே 3ம் நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வுகள் முகமை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும்,மறுதேர்வு நடைபெறும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.