
பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு முறையான ஆவணமாகும். இது வழக்கமாக ஒரு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கும் மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கும் மிகவும் அவசியமானது. இது விசா தேவைகளுக்கு ஏற்ப குடிமகன் ஒரு வெளிநாட்டு நாட்டில் பயணம் செய்ய அனுமதிக்கிறது, மேலும் வெளிநாட்டில் இருக்கும்போது குடிமகனுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது .
இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் பொதுவாக சில முக்கிய ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பிறந்த தேதிச் சான்று மற்றும் சமீபத்திய புகைப்படங்கள் போன்றவை. உங்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் தேவைப்படலாம் - (எடுத்துக்காட்டாக... நீங்கள் மறு விண்ணப்பம் அல்லது மைனருக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால்).
ஒரு நபர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் மிகவும் அவசியம். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்பு - ஜெ' எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
இந்த முயற்சி விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும், தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘இணைப்பு- ஜெ' என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும். இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை முறையாக அறிவித்து, பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க (அல்லது நீக்க) கூட்டாகக் கோருகின்றனர். படிவத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட கூட்டு புகைப்படத்துடன் இணைக்க வேண்டும்.
தம்பதியினரின் கூட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படம், இருவரின் முழுப் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறந்த தேதிகள். திருமண நிலையின் தெளிவான அறிவிப்பு, ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் எண் இருந்தால் தெரிவிக்கலாம்.
மறுமணத்திற்குப் பிறகு புதிய துணைவரின் பெயரைச் சேர்க்க விண்ணப்பதாரர்கள் விவாகரத்து ஆணை, மறுமணச் சான்றிதழ், முன்னாள் துணைவரின் இறப்புச் சான்றிதழ், மறுமணச் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சீர்திருத்தம் இந்திய குடிமக்களுக்கான ஆவணத் தேவைகளை எளிதாக்குவதன் மூலம் பொது சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான வெளியுறவு துறை அமைச்சரின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சீர்திருத்தத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இணைப்பு ஜே-ஐ பதிவிறக்கம் செய்ய, அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கூறினார்.