இன்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயலிழந்துவிட்டதால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, ஆன்லைன் வர்த்தக சேவைகள் என பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. பிரச்னையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் இவை முடங்கியதாக பேசப்படுகிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஜூலை 18) ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 8 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம் விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை இன்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக உள்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் பெ.அமுதா அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் துறைச் செயலாளராக கடந்த 16.07.2024 அன்று மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (19.07.2024) அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வழங்கியுள்ளார்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL-க்கு மாற்றியுள்ளனர். மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ₹199-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சேவையை BSNL ₹108-க்கு வழங்கி வருகிறது. 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.