நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் பொக்காராவுக்கு சவுதியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் இருந்த 19 பேரில் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறி பணமோசடியில் ஈடுப்படும் நபர்கள் அதிகரித்துள்ள நிலையில், “உண்மையான வேலைவாய்ப்புகள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் மட்டுமே அறிவிக்கப்படும். வேலைகளை வழங்க பணம் கேட்கும் தனிநபர்கள், ஏஜென்சிகளை நம்ப வேண்டாம்” என தெற்கு ரயில்வே, சென்னை மண்டலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டுகள் பெற 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேசன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை, மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், அவ்வழியாக இயக்கப்பட்டுவந்த மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் KGF-3 படத்தில் அஜித் குமாரை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்கு இடையில் அஜித்தை சந்தித்து இது குறித்து பிரஷாந்த் நீல் பேச்சுவார்த்தை நடத்தியாக கூறப்படுகிறது.